சதுரகிரி சித்தர்கள்
சித்தர்கள் யார்? அவர்கள் சித்தி அளிப்பவர்கள் அவர்கள் நடத்தும் சாகசங்கள் சித்தர் திருவிளையாடல் எனக்கூறலாம்.
நான் மதுரையை சேர்ந்தவன் என்பதால் எனக்கு முதல் முதலாய் தெரிந்த சுந்தரானந்தர் என்ற வல்லபை சித்தர் பற்றி பாப்போம். மதுரையில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு வலது புறமாக வல்லபை சித்தர் சன்னதி உண்டு. இவருடைய இயற்பெயர் சுந்தரானந்தர்.
சுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அகமுடையார் குலத்தில் பிறந்தார் என போகர் தெரிவிக்கிறார். யோகத்தில் நீண்ட காலம் அமர்ந்திருந்து சித்துக்கள் பல புரியும் ஆற்றல் பெற்றுள்ளார். அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார். இவரின் குரு சட்டை முனி என்று சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.அபிஷேக பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் சச்சிதானந்த வடிவாகிய சுந்தரானந்த சித்தர் மதுரையம்பதி கடை வீதி, சித்திரக்கூடம், நாற்சந்தி வீதி, உப்பரிகை போன்ற இடங்களில் திரிந்து பல சித்துக்களை விளையாடினார். இந்திரஜாலமாக மறைந்தும், பெண்ணை ஆணாக்கியும், ஆணை பெண்ணாக்கியும், ஊனமுற்றவர்களை சுகப்படுத்தியும், செம்புகளை தங்கமாக்கியும் பற்பல ஜாலங்கள் புரிந்திருக்கிறார். இதைக் கண்டு அதிசயித்த மக்கள் மன்னனுக்கு செய்தியை தெரிவித்தனர். மன்னன் சித்திரை அரண்மனைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார். ஆனால் சித்தரோ அரசனை தன்னை வந்து பார்க்கும் படியாகச் சொல்லியனுப்பினார்.சித்தரை சந்திக்க அரசர் ஆவலோடு வந்தார். சித்தரிடம் ஊர், பேர் முதலியவைகளைக் கேட்க தாம் பல சித்து விளையாட்டுகளை செய்து காட்டும் சித்தரெனக் கூறினார். அப்போது கையில் கரும்புடன் ஒருவன் வந்தான் அதைக்கண்ட அரசர் அக்கரும்பை வாங்கி சித்தரிடம் கொடுத்து “இக்கரும்பை இங்கு கற்சிலையாக நிற்கும் கல்யானையை உண்ணும்படிச் செய்தால் நீங்கள் சித்தர் என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்றார்.சித்தரும் சம்மதித்து கரும்பை கையில் வாங்கி கல் யானையிடம் நீட்டி கண்ணசைத்தார். அனைவரும், அரசரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கல்யானை துதிக்கையை நீட்டி கரும்பை வாங்கி உண்டு ஏப்பம் விட்டு பிளிரியது. அரசனும் அனைவரும் அதிசயித்து அன்பும், பக்தியும் பெருக்கெடுக்க சித்தர் திருவடிகளில் வணங்கினர்.நிமிர்ந்த போது யானை மறுபடியும் கல்யானையாக காட்சியளித்தது. சித்தரும் கோவிலுக்குள் சென்று மறைந்தார். இவர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சித்த்தராக சமாதியில் வீற்றிருக்கின்றார்.
இயற்றிய நூல்கள்:
1. சுந்தரானந்தர் காவியம்
2. சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
3. சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
4. சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
5. சுந்தரானந்தர் கேசரி
6. சுந்தரானந்தர் சித்த ஆனம்
7. சுந்தரானந்தர் தீட்சா விதி
8. சுந்தரானந்தர் பூசா விதி
9. சுந்தரானந்தர் அதிசய காரணம்
10. சுந்தரானந்தர் சிவயோக ஞானம்
11. சுந்தரானந்தர் மூப்பு
12. சுந்தரானந்தர் தண்டகம் ஆகிய நூல்களை எழுதினார்.
மேலும் பயிர் தொழில் சம்பந்தப்பட்ட சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் கூறியுள்ளார்.
தியானச்செய்யுள்
சித்து விளையாட்டில் சிறந்தவரே
சிவனுடன் கலந்தவரே
ஆயசித்தி அனைத்தும் அறிந்தவரே
அபயம் அளிக்கும் அருளாளரே
மதுரையம்பதி வாழ் மகத்துவமே
உன் பாதம் சரணம்.
சுந்தரானந்தர் பூசை முறைகள்
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் ஐந்து முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்
1. ஒளி பொருந்தியவரே போற்றி!
2. ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி!
3. லோக ஷேம சித்தரே போற்றி!
4. யோக மூர்த்தியே போற்றி!
5. அவதார புருஷரே போற்றி!
6. அபயமளிப்பவரே போற்றி!
7. சிவ யோகியே போற்றி!
8. இந்திரனுக்கு அருளியவரே போற்றி!
9. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
10. சகல சித்திகளையும் உடையவரே போற்றி!
11. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
12. சுகங்களைத் தருபவரே போற்றி!
13. தாய் போல் காப்பவரே போற்றி!
14. தண்டனைகளை நீக்குபவரே போற்றி!
15. தைரியத்தை கொடுப்பவரே போற்றி!
16. சித்த மருத்துவத் தெய்வமே ஸ்ரீ சுந்தரானந்த சித்தரே போற்றி! போற்றி!
எனக் கூறி நிவேதனமாகக் கடலை, வெண்பொங்கல் படைத்து இவற்றுடம் மஞ்சள் வஸ்திரம் அல்லது காவி வஸ்திரம் படைத்து வியாழன் அன்று வழிபட வேண்டும். நிறைவாக “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சுவாமியே போற்றி! போற்றி!” என 108 முறை கூறி வழிபட வேண்டும்.
சுந்தரானந்த சித்தரின் பூசை பலன்கள்:
1. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
2. கொடுக்கல், வாங்கல் பிரச்சனை ஏற்படாது.
3. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
4. புத்திர பாக்கியம் உண்டாகும்.
5. குரு பிரீதி அடைவர்.
6. புகை பிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.
7. சித்த பிரமை அகலும்.
8. ஞாபக சக்தி அதிகரிக்கும்.
9. வறுமை அகன்று வளமான வாழ்வு அமையும்.
Reference : நன்றி : kolumandapam.blogspot.com
Plz can I get your contact number and Email Id.
ReplyDeletePlz email to me paulraj2020@gmail.com
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநத்தைசூரி=செய்யும் வேலையில் வெற்றி. சர்க்கரை வில்வம்=சர்க்கரை நோய் குணமாகும். ரோம விருட்சம்=உடலை உறுதியாக்கும். பேய்மிரட்டி=பில்லி,சூனியம் அழிக்கும். தீபலட்சுமி=பண வரவு அதிகமாகும். மேற்கண்ட மூலிகைகள் அனைத்தும் கிடைக்கும் cell=9003143304=9488828315
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅற்புத மூலிகை ரகசியம் -8973392734 ஓரிதழ் தாமரை=ஆண்மை குறைவை நீக்கும் நத்தைசூரி=செய்யும் வேலையில் வெற்றி . ரோமவிருட்சம்=உடலை உறுதியாக்கும். பேய்மிரட்டி=பில்லி,சூனியம்,அழிக்கும். கொட்டைகரந்தை=அனைத்து தோல்நோய்களும் குணமாகும். சிறியாநங்கை=முகம் கவர்ச்சியாகும். கையாந்தகரை=நரைமுடி கறுப்பாகும். கருவேம்பு=நோய்கிருமிகளை அழிக்கும். சிறுகண்பீளை=கிட்னி கற்களை கரைக்கும். நேத்திரபூண்டு=கண் நோய் குணமாகி பார்வை கூர்மையாகும். நாய்குட்டி மரம்=இடுப்பு,மூட்டுவலி குணமாகும். மேற்கண்ட மூலிகைகள் அனைத்தும் எங்களிடம் கிடைக்கும் தொடர்புக்கு=8973392734
ReplyDeleteஅற்புத மூலிகை ரகசியம் -8973392734 ஓரிதழ் தாமரை=ஆண்மை குறைவை நீக்கும் நத்தைசூரி=செய்யும் வேலையில் வெற்றி . ரோமவிருட்சம்=உடலை உறுதியாக்கும். பேய்மிரட்டி=பில்லி,சூனியம்,அழிக்கும். கொட்டைகரந்தை=அனைத்து தோல்நோய்களும் குணமாகும். சிறியாநங்கை=முகம் கவர்ச்சியாகும். கையாந்தகரை=நரைமுடி கறுப்பாகும். கருவேம்பு=நோய்கிருமிகளை அழிக்கும். சிறுகண்பீளை=கிட்னி கற்களை கரைக்கும். நேத்திரபூண்டு=கண் நோய் குணமாகி பார்வை கூர்மையாகும். நாய்குட்டி மரம்=இடுப்பு,மூட்டுவலி குணமாகும். மேற்கண்ட மூலிகைகள் அனைத்தும் எங்களிடம் கிடைக்கும் தொடர்புக்கு=8973392734
ReplyDelete